#shame.. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படத்தை 'ஸ்நாப்சேட்டில்' பதிவேற்றிய சிறுவர்கள்..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
அரசியல்

அமெரிக்காவில் 14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து அதை 'ஸ்நாப்சேட்' வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். 


அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் அந்தப் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். அந்தப் பார்டியின்போது சிறுவர்கள் ஒயின் மற்றும் வோட்கா எனப் பல்வேறு வகையான மதுபானங்களை அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில் மது அருந்தி மயங்கிய ஒரு சிறுமியை அந்தச் சிறுவர்கள் இருவர் தனியாக அறைக்குச் தூக்கிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர் அந்தச் சிறுமியை இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதைப் புகைப்படம் எடுத்த அவர்கள், அந்தப் படங்களை 'ஸ்நாப்சேட்' சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் ஏப்ரல் 1-ம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தச் சிறுவர்களைத் தேடி வருகின்றனர். 

சமீப காலமாக தற்கொலை செய்துகொள்வதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையில் பதிவேற்றம் செய்வதும், பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்வதைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் செயலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.