ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய துணை முதல்வர்!

அஸ்வினி.சி
அரசியல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவற்ற குழந்தைகளுடன் இந்த புத்தாண்டை வரவேற்றுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பன்னீர்செல்வம், அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


’தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், நாம் அனைவரும் ஒறுமித்து உழைத்து, தடைகளைத் தகர்த்து, வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட உறுதியேற்போம்’ என்று மக்களுக்கு வாழ்த்துக் கூறி, ட்வீட் செய்துள்ளார்.