நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம் - கேரள நடிகர் சங்கம் அதிரடி

பிரேம் குமார் எஸ்.கே.
கோலிவுட்

கேரள சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப், நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். 


கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் கொச்சியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது. இந்த வழக்கில் கைதான கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 

அவர் கைதானதைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்க (AMMA) கூட்டம், அவசரமாக நடிகர் மம்மூட்டி வீட்டில் கூடியது. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள், நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கப்படுவதாகத் தெரிவித்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் பொருளாளராகவும் உள்ளார். தற்போது அவர் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். 

நடிகர் திலீப் 'கேரளா திரைப்பட ஊழியர் கூட்டமைப்பில்' இருந்தும் நீக்கப்பட்டார்.