You are on page 1of 11

தமிழ் மொழி

எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில்


காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன.அவற்றுள் தமிழ்,
சமஸ்கிருதம்,இலத்தீன் முதலியன சிலவாகும்.
சமஸ்கிருதமும்,இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை.ஆனால் தமிழ்
மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றது. தமிழ்
மொழி தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும்
குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி ஆரம்பத்தில் இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த
மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ் மொழியை பேசிய இனத்தோர் தமிழர்
எனப்பட்டனர். தமிழ் மொழி வழங்கிய தேசம் தமிழகம், தமிழ் நாடு,
திராவிடம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
தமிழ் நாட்டை பண்டைய நாளில் சேர சோழ பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சி
புரிந்தனர். இவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பாடு பட்டனர். தமிழ்
மொழியை கற்று உணர்ந்த புலவர்களை பொன்னும் பொருளும் தந்து
வாழ்த்தினர்.
தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்த தமிழ் இன்று மலேசியா, சிங்கபூர்,
இலங்கை, தென்னாபிரிக்கா,.. போன்ற பல நாடுகளில் வழங்கி வருகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது.
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
இயல் தமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசை தமிழ் இசையுடன் இணைந்தது.
நாடக தமிழ் கதை, கூத்து என்பன கலந்து வருவது.
பண்டைத்தமிழ் மன்னர்கள் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை,
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாகும். இதன் மூலம் பல
தமிழ் நூல்களை இயற்றினார்கள். இலங்கை நாட்டவரான ஈழத்துப்பூதன்
தேவனார் கடைச்சங்க புலவருள் ஒருவர் ஆவர். அவர் நக்கீரர், கபிலர், பரணர்
போன்று அறிய பாடல்களை எழுதிஉள்ளார்.
தமிழ் நூல் பரப்பு மிகவும் பறந்து பட்டது. "திருக்குறள், சிலப்பதிகாரம்,
கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம்"
என்பன அவற்றுள் சிலவாகும். பாரதியார் "யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எங்காயினும்
கண்டதில்லை" என அறுதியிட்டு கூறியுள்ளார்.
மிகப் பிறகாலத்திலே நாவலர் பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர்
தோன்றி தமிழ் மொழிக்கு பெரும் தொண்டாட்டினர். "நல்லை நகர் ஆறுமுக
நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே?" என்று சொல்லும் அளவிற்கு
நாவலரின் தொண்டு அமைந்திருந்தது. பாரதியார் புதுமை புரட்சிக்கு
வழிவகுத்தார்.
இன்று பல்கலைகழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும் தமிழ்
மொழியை பேணுவதில் ஈடுபட்டு வருகின்றன.
எளிமை, இனிமை, தொன்மை படைத்த தமிழ் மொழியை சான்றோர் தமிழ் தாய்
என்றும் தமிழ் தெய்வம் என்றும் போற்றுவர். எங்கள் தமிழ் தாய் தமிழ் பேசும்
பல கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றாள் என்று
கூறினால் அது மிகையாகாது.

****வாழ்க தமிழ் அன்னை****

தமிழர் திருநாள்
தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு
வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத்
திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில்
கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது
மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாள்... தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும்


பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும்
பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.
தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்
பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ்
உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக
கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில்
பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை.


1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று
இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு
என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப்
பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல்
அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர்
பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல்


நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3 வது நாள் மாட்டுப்
பொங்கல். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன்,
விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்
வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில்,


அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை
பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை
அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற
மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டுப் பொங்கல்.
2 ஆவது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது.
சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து,
மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது
அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள்.
வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும்
நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது
குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி
வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது
ஐதீகம். மாட்டுப் பொங்கல்.

3 வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள்


விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள்,
பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை
அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு
வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.
ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது
கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு
வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி
விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு
தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும்
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல்

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுதவிர


நான்காவது நாள் காணும் பொங்கலாக வட மாவட்டங்களில்
கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு
வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது
கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும்,
பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். கன்னியாகுமரி
மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

கரும்பு-ஜல்லிக்கட்டு-பொங்கல்.. பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய


அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப் பொங்கல்தான். இவை
இல்லாமல் பொங்கல் நிறைவடையாது. கரும்புகளுக்கு பொங்கல்
பண்டிகையின்போதுதான் செம கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு
சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல பொங்கல் பண்டிகையின்போது
கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் விசேஷமானவை.
அலங்காநல்லூர், பாலமேடு, காஞ்சரம்பேட்டை ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு
பெயர் போனவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு
களமாகும். தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும்
பொங்கல் பண்டிகையை, தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும்
அறிவித்துள்ளதால், தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு
சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். அதேசமயம்,
பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து,
வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும்
சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

கல்வியே சிறந்தது
இன்றய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும்.
எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது
இன்ரைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப் படுகிறது. ஏனெனில்
கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று
கல்வியானது மனிதனின் அத்தியவசிய தேவையாக இருக்கிறது.
கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச்
சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்க்கு காரணம்
அவன் கற்ற கல்வியே

கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய


ஊராகும்.இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும்
வரைகல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும்
சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

*யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்


சாந்துணையும் கல்லாதவாறு* என்று குறிப்பிடுகிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு
கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல்
போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற
அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.

*கற்க கசடறக் கற்பவை கற்ற பின்


நிற்க அதற்குத் தக* என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் இவை


இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று
சொல்லப் படுவர். இந்த அளவிற்க்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப்
படுகின்றது.

*கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு


புண்ணுடையர் கல்லாதவர்*

கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது


கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிற்து. அதே கண்
இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது.
இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும்
கூறப்படுகின்றது.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு


மட்டுமல்லாமல் அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர்.
இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது நான் மீண்டும் சேர்வோம்!
என்ற நினைவிலேயே பிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்.

மனிதன் அயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க


மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம்
சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு மறபை ஆராய்ந்து கொள்ளலாம்.

*கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும்


மரணிப்பதில்லை*

மேற்கூரிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பை கணலாம்.


அதாவது இக்கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை. என்பது கல்வி
கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற, கற்ப்பித்த கல்வி இந்த உலகம்
அழியும் வரை இருந்தே ஆகும்.
இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனகூறப்படுகிறது.
இதற்க்கு சிறந்த உதாரணம் 1400 வருடங்களுக்கு முன் கற்ப்பித்த புனித இஸ்லாம்
மார்க்கம் இன்ரு வரை நடைமுறைப் படுத்த படுகிறது. இதனைப் போதித்தவர்
மரணித்து விட்டார். அவர் கற்ப்பித்தவை இன்றும் எம்மத்தியில் காணப்படுவதை
காணலாம்.

*தான் இன்புறுவது உலகின் பிறர் கண்டு


காமுருவர் கற்றரிந்தார்.*

ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும்


கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப் படுகிறது.

மாந்தர் தம் கற்றனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை


நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவியற் கல்வி,
சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு
அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம்
கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.

கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிற்து. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்க்காக


உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும்
கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப
கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை
பயன் படுத்த வேண்டும்.

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே


அமைந்து காணப்படும். எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய
தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது
இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப் படும்.

எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய


முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்
வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும் இவ்வாறு
கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.

ஒழுக்கம் உயர்வு தரும்


‘ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி’

திருவள்ளுவர், இந்தக் குறளில் ‘ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும்,


ஒழுக்கம் தவறுவதால் பழி ஏற்படும்’ என்றும் ஒழுக்கத்தின் சிறப்பை
வலியுறுத்துகிறார். கல்வி கற்கும் மாணவர்களாகிய நாம் ஒழுக்கத்தையும்,
கல்வியையும் இரு கண்களாக கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியை பயின்று
சிறப்புற வேண்டும். ஒழுக்கத்தை காலம்தோறும் பேணிக் காக்க வேண்டும்.

நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச்


செய்யும் பண்பே ஒழுக்கம் ஆகும். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து
வாழ்வதே நாம் தலைச்சிறந்து வாழ வழிவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள்
இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதை
முன்னோர் அறநெறிகள், அனுபவங்கள் மூலம் ஒழுக்கத்தை உணர்த்திச்
சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்து உள்ளனர்.

மாணவர்களாகிய நாம், நேர்மையுடன், பொறுப்புடன், சமூகப் பொறுப்பு


கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர்கள் வழிகாட்டும்
பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த சிந்தனை
கொண்டோராக செயல்பட வேண்டும்.

நீதி நூல்கள்:

நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் சான்றோர்கள் இயற்றிய


நீதிநூல்கள் பல நீதிக்கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதாக
உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார்,
திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய
வரலாற்றில் முத்திரை பதித்தவை ஆகும். இவற்றில் திருக்குறள், உலகளவில்
தமிழர்களின் ஒழுக்க நெறிகளை பறைசாற்றும் ஒப்பில்லா நூலாக புகழப்படுகிறது.
அதனால்தான் அதை ‘உலக பொதுமறை’ என போற்று கிறார்கள். உலக
மொழிகள் பலவற்றில் மொழிப்பெயர்க்கப்பட்டு பயிலப்படுகிறது.

‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு


என்று பொருள். ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை
உயிரினும் பெரியதாய் மதித்துப் போற்ற வேண்டும் என்று வள்ளுவர் குறளின்
வழியே வலியுறுத்துகிறார். ஒருவர் தம் வாழ்வில் நன்மை அடைய
வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது.
இக்கருத்தையே வள்ளுவர் “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” என்று
விளக்குகிறார். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே நிலைக்கும், தழைக்கும்.

ஒழுக்கக் கல்வி:

பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால்,


வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரும். நம்மை வழுக்கி விழாமல்
தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் ஒழுக்கமுடையோர் வாய்ச்சொல்லும், நம் தமிழ்
நீதி நூல்களும்தான். எந்த நிலையிலும் நமக்கு தீர்க்கமான வழியை அறம் சார்ந்தே
போதித்து வழிநடத்தும் வழிகாட்டிகள், நீதிநூல்கள் தான்.

மாணவர்களாகிய நாம், பாடங்களில் கற்கும் நீதிக் கருத்துக்களைத் தேர்வு


முடிந்தவுடன் மறந்து விடுதல்கூடாது. மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும்,
கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்த்து, எந்த வித
பேதங்களும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும்
கற்ற நெறிப்படி நடக்க வேண்டும். இதையே வள்ளுவர், “கற்க கசடற கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று அழகாகவும், தெளிவாகவும் உலக மாந்தருக்கு
எடுத்துரைக்கிறார்.

மாணவர்களாகிய நாம் திரைப்படம், தொலைக்காட்சி போன்ற புறக்


கவர்ச்சிகளில் அடிமையாகி நம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான
ஒழுக்கத்தையும், அறிவூட்டும் கல்வியையும் செம்மையாக்கி கற்று, கற்ற
நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறக்கலாம். நெறி தவறாமல்
வாழ்ந்து சிறப்போம்! நாட்டின் பெருமை காப்போம்!

உடல் நலத்தைப் பேணுவோம்


உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும்,
சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன்
இருப்பது அவசியமாகும்.
‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்றார் அவ்வையார். மனித பிறவியில்
உயிரின் கூடாகவும், உணர்வுகளின் வீடாகவும் விளங்குவது உடலாகும். உடல்
நலமின்றி போனால் உயிர்ப்பறவை போய்விடும். அதனால் தான் உடம்பார்
அழியின் உயிரார் அழிவர் என்பார் திருமூலர். இந்த உலகில் நீண்ட நாள் வாழ
உடல்நலம் பேணல் வேண்டும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது
பழமொழி.

நோயில்லா வாழ்வே வாழ்வு, நோயுடைய வாழ்வு எத்தன்மைதாயினும் அது


வாழ்வாகாது. உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள்
வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல்
நலத்துடன் இருப்பது அவசியமாகும். நாம் வாழ வீடு கட்டிக்கொள்கிறோம்.

நோய் பரவாமலிருக்க வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். அதுபோல்


உயிர் வாழ உடல் தேவை. அந்த உடலை பேணிப் பாதுகாத்தால் நோயின்றி
நீண்டநாள் வாழலாம். அதற்கு நன்முறைகள் சிலவற்றை கடைப்பிடித்தல்
அவசியமாகிறது. மனிதன் வாழ்வாங்கு வாழ இன்றியமையாதவை மூன்று,
அவை உணவு, உடை, உறைவிடம் என்பன. இம்மூன்றையும் நன்கு பார்த்து
கொள்ளவேண்டும். பசித்த பின் புசி என்பது நல்ல அறிவுரை. பசியோடு உண்ணச்
செல். பசி அடங்குவதற்குள் எழுந்துவிடு என்பார் கவியரசு வைரமுத்து. முன்பு
உண்ட உணவு செரித்ததை அறிந்து உண்டால் உடம்புக்கு மருந்து தேவையில்லை
என்பார் திருவள்ளுவர்.

சிலர் சுவைக்கு அடிமைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்கின்றனர். அளவுக்கு


மிஞ்சினாலும் அமுதம் நஞ்சாகும் அன்றோ? வாழ்வதற்காக உண்ண வேண்டுமே
தவிர, உண்பதற்காக வாழக்கூடாது. நீரும், காற்றும், ஒளியும் மனிதனை
வளர்க்கும் தெய்வங்கள் ஆகும். தூய நீரில் நீராடி, காய்ச்சி வடிகட்டிய நீரை பருகி
உடலை பேண வேண்டும். உண்ண தகுந்த உணவுப்பொருட்களை உண்ண
வேண்டும்.

‘புறந்தூய்மை நீரான் அமையும்’ என்பது திருவள்ளுவர் கூற்று. கந்தையானாலும்


கசக்கி கட்டு. ‘கூழானாலும் குளித்துக் குடி’ என்பன பழமொழிகள். நீராடிய பின்
தூய உடை உடுத்தவேண்டும். நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாய்
இருக்கவேண்டும். காற்றும், சூரிய ஒளியும் தாரளமாக உள்ளே புகும் வகையில்
வீடும், உறங்கும் இடமும் அமையவேண்டும்.

மேலும் உடலின் வலிமைக்கு உடற்பயிற்சி அவசியம். அதன் மூலம் ரத்த ஓட்டம்


சீராகும். உடலின் கழிவுப்பொருட்கள் வெளியேறும். துணிவும், தெம்பும்,
சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு, நீச்சல், நடைப்பயிற்சி மற்றும்
யோகா போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும். இறைவன் வழங்கிய
அருட்கொடையே நமது உடல். அதனை காப்பதே நம் முதற்கடமை. சுவரை
வைத்தே சித்திரம் வரைய வேண்டும். உடலை வைத்துதான் உயிரை
பேணவேண்டும். உடலை பேணுவோம். உயிரை காப்போம்.

You might also like