Escolar Documentos
Profissional Documentos
Cultura Documentos
எல்லாமுமான மொழி...
இந்த நான்கு வரி கவிதையானது, மொழி ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும் மொழி
இல்லையேல் சமுதாயம் இல்லை என்பதனையும் உணர்த்துகிறது. அப்படிபட்ட மொழியினை ஆராயும்
ஒரு துறையே மொழியியல் ஆகும். மொழியினை ஆராய்ச்சி செய்யும் ஒருவர் மொழியியலாளர்
ஆகும். மொழியை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவியலையும் கலையையும் இணைத்து
ஒரு அரிய பாலமாக விளங்குவது மொழியியலாகும். மொழியியலின் அமைப்புகளாக ஒலியியல்,
ஒலியனியல், உருபனியல் மற்றும் தொடரனியல் உள்ளன. மொழியியலைத் தூய மொழியியல், பயன்படு
மொழியியல் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தூய மொழியியல் என்பது மொழியியற்
கோட்பாடுகளை விளக்குவது ஆகும். பயன்படுமொழியியல் என்பதோ மொழியியலின்
கோட்பாடுகளைத் தனித்தனி நிலையிலும் உளவியல், மானிடவியல், சமுகவியல் முதலிய பல
துறைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும் நிலையில் விளக்குவது ஆகும்.